From: Jeyakanthan
To: NagamalaiDudes@yahoogroups.com
Hello friends,
I'm jeyakanthan. Can everyone remember me ?
How is life going ?
With regards
A.Jeyakanthan
jeyakanthan
----------------------------------------------------------
From: Shankar
To: NagamalaiDudes@yahoogroups.com
ஜெயகாந்தன் ???????
நம்ம ஜெயகாந்தன் ?????
குமரேசன் மண்டைய கிரிக்கெட் பாட்ல பொளந்த ஜெயகாந்தன் ??????
ஒருத்தனாவது reply பண்ணுரானுங்களா ஜெயகாந்தனுக்கு ???????
ஜெயகாந்தன்னா அவளோ இளக்காரமா போச்சாடா உங்களுக்கு ???????
நாகமலை
ஜெயகாந்தன்டா.. நாகமலை ஜெயகாந்தன். ஆழ்வார் நகர ஆட்டிப்படைச்சவன்டா..
அவன் ஒரு வெடிக்காத எரிமலை, அடிக்காத சூறாவளி, கடிக்காத அனக்கொண்டா அப்படின்னு நினைச்சீங்கனா அது உங்க தப்பு. தாங்க மாட்டீங்கடா அவன் வெடிச்சா. தாங்கமாடீங்க. அவன் மண்டைவேனா காஞ்சு போன வயக்காடு மாதிரி இருக்கும் ஆனா அவனோட பாசம் காயாத துண்டு மாதிரிடா. காயாத துண்டு மாதிரி.
நண்பா நல்லா இருக்கியா??? பல்லு தேச்சியா? குளிச்சியா? சாப்பிட்டியா? உயிர் நண்பன்தான் இதெல்லாம் கேட்பான்.
நண்பா நான் இருக்கேன்டா. நான் இருக்கேன். உன் கேள்விக்கு பதில் சொல்ல நான் இருக்கேன். நீ கவல படாத.
Nagamalai dudesa இல்ல வருத்தப்படாத வாலிபர் சங்கமா???
Rgds,
Shankar
----------------------------------------------------------
From: Poorna Chelvan
To: NagamalaiDudes@yahoogroups.com
dey Shankar,
what Jeyakanthan did for u?... He did a mistake by residing near u'r home when u were in nagamalai... what else he did to u?...paavam. . he won't turn up again and send mails to the group...
Hope All my friends are in cheers and busy in their work.... take care all of u...
N.Poorna Chelvan
----------------------------------------------------------
From: Shankar
To: NagamalaiDudes@yahoogroups.com
நண்பர் ஜெயகாந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜெயகாந்தன் பூரண செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ அந்த பழனி வேல்முருகனும், திருச்செந்தூர் செந்தில்குமரனும், சைதாப்பேட்டை முத்துக்கிருஷ்ணனும், சபரிமலை மணிகண்டனும் ஆசி புரிய வேண்டும் என்று மனமுருகி பிரார்த்திக்கிறேன்.
ஜெயகாந்தன்!
ஜெயம் என்றால் வெற்றி! காந்தம் என்றால் ஈர்ப்பு!
தன்னுடைய அன்பால், பண்பால், மதியால், சதியால், தந்திரத்தால், பாசத்தால் எல்லோரையும் காந்தம் போல் ஈர்த்து வெற்றிபெற்றவன் என்று பொருள்படுகின்றது!
புலி உறுமி கேட்டதில்லை!
ஜெயகாந்தன் இருமி கேட்டதுண்டு!
இடி இடித்து கேட்டதில்லை!
ஜெயகாந்தன் பேசி கேட்டதுண்டு!
மாவு மெஷின் இரைச்சலை கேட்டதில்லை!
ஜெயகாந்தன் மசால் கடலைமென்றதை கேட்டதுண்டு!
அடிமேல் அடியடித்தால் அடிபம்பிலும் தண்ணி வரும் என்று எனக்கு அறிவுறுத்தியவர் நண்பர் ஜெயகாந்தன்.
கோவில்பட்டியில் இருந்து நாகமலையில் குடியேறிய சிவகாசி. ஜெயராஜ் நாடாரில் இருந்து SVN கல்லூரி என்ற கடலில் பலரை கதறடித்த சுறா.
போக்கிரியாக நாகமலையில் திரிந்த பலரை குருவியை கொல்வது போல் வில்லெடுத்து வீழ்த்திய வேட்டைக்காரன் (என்னடா இவன் விஜய் படம் டைட்டிலா சொல்றான்னு நினைக்ககூடாது)
போதும் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
டேய் சேகர் முட்டக்கோசு!
உன்னைய எவன்
டா பழைய நம்பர்க்கு போன் பண்ண சொன்னது? சரி விடு. ஆகஸ்ட்ல சந்திப்போம்.
அன்புடன்,
உங்கள் ஆருயிர் நண்பன்,
Shankar
----------------------------------------------------------
From: Mohammad Khalith
To: NagamalaiDudes@yahoogroups.com
hai shankar
how r u?
Jeyakandhan ! remember me nnu thanne kettu anuppinaan. athukku yen indha kolai veri.
Tamil semmozhi maanaadu nadukka irukkunnu theriyum. neeyum athila kalandhukka porennu sollave illaye.
Take care, guys.
A.MOHAMMED KHALITH
----------------------------------------------------------
From: Shankar
To: NagamalaiDudes@yahoogroups.com
DMK நடத்தும் உலகத் தமிழ் மாநாட்டை உன்னிப்பாக கவனித்து வரும் நண்பர் AMKவிற்கு (A MOHAMMAD KHALITH) என் பணிவான வணக்கங்கள்!
ஜெயகந்தனுடனான
எனது நட்பை,
"கற்புடைய பெண் அமிர்து, கற்று அடங்கிய வித்யா சங்கர் அமிர்து
நற்புடைய நண்பர்கள் அமிர்து - நற்புடைய
மேகமே சேர்கொடி வேந்து அமிர்து, சேவகன் ஜெயகாந்தனும்
ஆகவே செய்யின் அமிர்து"
என்று பின்னாளில் நாடு போற்றும்.
நண்பர் ஜெயகாந்தனிடம் எனக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கின்றது? கூறுங்கள் நண்பர் காலித் அவர்களே! கூறுங்கள். கூறிப் பாருங்கள்.
வாழ்க்கை ஒரு ஐஸ் கத்தி அனுபவம் என்பதை எனக்கு புரியவைத்தவர் இனிய நண்பர் ஜெயகாந்தன்.
அந்த சம்பவத்தை மற்ற நண்பர்களுக்கு தெரிவிப்பது என் கடமையாகின்றது.
எட்டாம் வகுப்பு. குண்டியாட்டி பால்ராஜ் ஆங்கில பாடத்தை தமிழில் எடுத்துக்கொண்டிருந்த நேரம்.
ஜெயகாந்தன் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்.
அது:
"இட்லி, தோசை, பிட்சா, பூரி, சப்பாத்தி, பரோட்டா, பர்கர், அடை, வடை, ஊத்தப்பம், ஆம்லெட், பணியாரம் எல்லாம் ஏன் வட்ட வடிவமாக இருக்கிறது ?"
விடை தெரியாமல் விழித்த நான் அருகே அமர்ந்திருந்த நண்பர் செந்திலின் காதை கடித்தேன். வலது கையின் நடுவிரலை நீட்டி ஏடாகூடமான சம்பாஷணைகள் செய்து, கொடிய விஷப்பாம்பு நஞ்சைக் கக்குவது போல் பல கெட்ட வார்த்தைகளை பிரயோகித்து கண்டபடி என்னை ஏசினார்.
விடை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில், மேசையின் ஓரத்தில் இருந்த ஆணியை இடது கையின் ஆட்காட்டி விரலால் சுரண்டியவாறு வலது கை ஆட்காட்டி விரலால் முன்னால் அமர்ந்திருந்த நண்பர் முத்துக்கிருஷ்ணனின் முதுகை சுரண்டி அவரிடம் ஜெயகாந்தனின் கேள்வியை கூறினேன்.
அதற்கு அவர், "நீ புடுங்குறது பூராமே தேவை இல்லாத ஆணிதான். போய் புடுங்கு போ", என்றார்.
இடைவேளை.
எப்படியும் விடையைக் கண்டுபிடித்திட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.
கத்தியை தீட்டினால் சத்ரியனாகவும், புத்தியை தீட்டினால் சாணக்கியனாகவும் செயல்பட்டுகொண்டிருந்த, மூர்க்கத்தனமும், போர்க்குணமும் நிறைந்த நண்பர் மாறனை அணுகினால் விடை கிடைக்கும் என்ற ஆவலோடு எட்டாம் வகுப்பு B பிரிவில் நுழைந்தேன்.
குருசாமி எடுத்த கணக்கு வகுப்பு ஏற்படுத்திய குழப்பத்தில் இருந்து மீளாமல் விட்டத்தை வெறித்துப்பார்த்தபடி வாய்க்குள் 8 ஈக்கள் சென்றது கூட தெரியாமல் கொட்டாவி விட்டு கொண்டிருந்த நண்பர் மாறனிடம்,
"இட்லி, தோசை, பிட்சா, பூரி, சப்பாத்தி, பரோட்டா, பர்கர், அடை, வடை, ஊத்தப்பம், ஆம்லெட், பணியாரம் எல்லாம் ஏன் வட்ட வடிவமாக இருக்கிறது ?" என்று கேட்டேன்.
அதற்கு அவர், "பிட்சா என்றால் என்ன?", என்றார்.
கையில் வைத்திருந்த இஞ்சிமரப்பாவை அவரிடம் குடுத்து 'இதை சப்பிக் கொண்டிரு' என்று சொல்லி கோபத்தோடு வெளியேறினேன்.
எதிரே அப்பொழுதுதான் உச்சா போய்விட்டு டவுசரின் இரண்டு ஜேப்பிலும் கையை விட்டு கொண்டு எங்கோ சொறிந்தபடி நண்டு போல் ஒரு சைடாக நடந்து வந்த நண்பர் வேல்முருகனை வழிமறித்தேன்.
கேள்வியை நான் கேட்கும் முன்னரே அவர் என்னிடம், "அகிலத்தை அடைவது எப்படி"? என்றார். அதற்கு நான், "அகிலத்தை படைத்தவரை அணுகினால் அனுகூலம் கிடைக்கும்" என்றேன்.
மாலை வேலை வந்துவிட்டது. விடை என்ன என்று ஜெயகாந்தனிடமே கேட்டேன்.
ஆள்காட்டி விரலால் காற்றில் ஒரு முட்டையை போட்டு, "வாழ்க்கை ஒரு வட்டம்டா. இங்க தோக்குறவன் ஜெயிப்பான். ஜெயிக்கிறவன் தோப்பான்", என்றார்.
பிரமித்துப்போனேன்.
அன்று நியூட்டன் மரத்தில் இருந்து
விழுந்த ஒரு ஆப்பிளை வைத்து புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார். ஆனால் இன்று நண்பர் ஜெயகாந்தனோ ஒரு இட்லி வட்டமாக இருப்பதை வைத்து வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபித்துக்காட்டிவிட்டார்.
நண்பர்கள் அனைவருக்கும் இப்பொழுது புரிந்து இருக்கும், ஜெயகாந்தன் என்றால் ஏன் நான் இவ்வளவு உரிமை எடுத்துக்கொள்கிறேன் என்று!
அன்புடன்,
உங்கள் ஆருயிர் நண்பன்,
Shankar
Life revealed in a small round idli by the lights of Jeyakanthan!
----------------------------------------------------------
From: maran kumar
To: NagamalaiDudes@yahoogroups.com
Hi da Sankar,
Very nice and creative script man... I opened it in morning @ office and started to laughing... still right now. All my colleaques watching me differently pa.
Then how are you doing man? where are u right now? any updates???
Dudes: Hope everyone doing great & busy in their assignements, take care
Cheers
Maran.M
----------------------------------------------------------
From: Mohammad Khalith
To: NagamalaiDudes@yahoo.com
anbu nanba shankar,
Chance-a illa. unakku nihar neethaan,
really your explanation is excellent.
athuvum, kundiati palraj, english class a tamilla eduthukkittu irundhaarnnu sonnathum, velmurugan agilathai adaiya vazhi kettathum, inji marapavai sappa solli maran kitta koduthathum, no substitute.
Extraordinary.
Indha maathiri visayangal yosikira alavukku unakku engada neram kidaikkuthu?
Anyhow ellathaiyum marandhu oru 5 mins sirikka vaithatharkku thanks.
Take care guys
A.MOHAMMED KHALITH
----------------------------------------------------------
From: Jeyakanthan
To: NagamalaiDudes@yahoogroups.com
Dear Sankar,
De sankar,Nee thirundeva matteya....
Birthday wishes for you
Regards
Jeyakanthan